கிளிநொச்சி பூநகரி இரணைத்தீவு கடற்பரப்பில் இரண்டு றோலர் படகுகளுடன் இருபது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு(24) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போதே கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு றோலர் படகுகளில் இருபது மீனவர்கள் இரணைத்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழில் செய்துகொண்டிருந்த போது கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் (25) கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளனர்.
அவர்களை ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் நீதி மன்றில் முற்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி